சாக்ரமெண்டோ வாழ் தமிழ் மக்கள் தமிழ் மொழி கற்கவும், கற்பிக்கவும், வளர்க்கவும் உருவாக்கப்பட்டது இந்த தமிழ்க் கல்விக்கழகம். தமிழின் மொழிவளத்தை எடுத்துரைக்கவும், நம் கலாச்சாரத்தை வரும் தலைமுறை தமிழர்களுக்கு நினைவூட்டவும் உழைப்பதே கடமையாய் ஏற்று நடக்கிறோம்.
பள்ளி மாணவர்களுக்கும், இளம் சிறார்களுக்கும், ஆர்வமுள்ள அனைவருக்கும் அன்னை தமிழை பயிற்றுவிக்கிறோம். பிறமொழி பாடக்கல்விக்கு உதவிடும் எங்கள் கல்வித்திட்டம் மாணவர்களின் பள்ளிக்கல்வியின் ஒரு அங்கமாகும் தகுதியுடையது.
செம்மொழியாம் தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் மூலம் தமிழ் இலக்கணம், இலக்கியங்கள், வரலாறு, அறிவியல் மற்றும் கணிதத்தை கற்றுத் தருவதும், இவை சார்ந்த நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பதும் சாக்ரமெண்டோ தமிழ்க்கழகத்தின் முக்கிய நோக்கமாகும்.